14594 கட்டிடக் காடும் யுரேனியக் கதிரும்.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). ஒiஎ, 82 பக்கம், விலை: ரூபா 300., அளவு:17.5×12.5 சமீ., ISBN: 978-955-71331-2-6. கவிஞர் ரஜிந்தன் எழுத்தாணி முனையில் பயணப்பட்டிருக்கும் தனது பயணத்தில் பொற்கனவு, நிலா நாழிகை, ஆகிய கவிதை நூல்களைத் தொடர்ந்து மூன்றாவது கவிதைத் தொகுப்பாக இந்நூலை வெளியிட்டுள்ளார். கடந்தகால அனுபவங்கள், நிகழ்காலப் படிப்பினைகள், எதிர்கால எதிர்வுகூறல்கள், என்ற அடிப்படையில் தன் சிந்தனையில் உதித்த முத்துக்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்து அவற்றில் “வரம் வேண்டும்” என்ற கவிதையில் தொடங்கி, “மீள் பிரசவம்” என்ற கவிதை ஈறாக 50 கவிதைகளைத் தேர்ந்து கவி மாலையாகக் கோர்த்திருக்கின்றார். இக்கவிஞர் யாழ். நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

14325 அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கான அரசாங்க ஆலோசனைகள்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: நீதி, அரசியலமைப்பு அலுவல்கள், இன அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களம்). vi, 161 பக்கம், 6

14201 தமிழ் அகதிகளுக்காக மாமாங்கப் பிள்ளையார் தோத்திரம்.

ந.மா.கேதாரபிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: ந.மா.கேதாரபிள்ளை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, மார்ச் 2007. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (10) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. இந்நூலில் எட்டு வரிகளில் அமைந்த

14715 மானுடம் தோற்றிடுமோ?.

எஸ்.கருணானந்தராஜா. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2019. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). xii, 180

12312 – கல்வியியல்: ஓர் அறிமுகம்.

ச.முத்துலிங்கம். யாழ்ப்பாணம்: வி.சதாசிவம், கீதாஞ்சலி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1974. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி). (8), 322 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ. கல்விக்