சிவயோகமதி கந்தவனம். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கனடா: சைவ சித்தாந்த மன்றம், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 270 பக்கம், சித்திரங்கள்;, புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0881-02-4.
சைவநெறிநின்று மக்கள்சேவை மகேசன் சேவையெனத் தொண்டு புரிந்த அறுபத்து மூவர் உள்ளிட்ட சைவத்தொண்டர்கள் பற்றிய சரிதையைச் சுருக்கமாக இந்நூல் கூறுகின்றது. ‘மென்தொண்டர்’ என்ற வகைக்குள் சரியைத்தொண்டர், வாழ்வியல் தொண்டர், சோறிட்ட தொண்டர், விளக்கிட்ட தொண்டர், திருப்பணித் தொண்டர், சொன்மாலைத் தொண்டர், சிவன் கழல் மறப்பிலார், சைவமும் தமிழும் தளைப்பித்தோர், வழிகாட்டுந் தொண்டர் என ஒன்பது பிரிவுகளுக்குள் 46 தொண்டர் பற்றியும், ‘வன்தொண்டு’ என்ற பிரிவுக்குள் இயற்பகை நாயனார் முதல் விறன்மிண்ட நாயனார் ஈறாக பதினேழு நாயன்மார் பற்றியம், ‘இலைமறை காயான பெண் தொண்டர்கள்’ என்ற மூன்றாவது பிரிவுக்குள் வெண்காட்டு நங்கை, இயற்பகையின் இல்லக்கிழத்தியார், திலகவதியார் ஆகிய மூவர் பற்றியும் கூறும் இந்நூலின் பின்னிணைப்பில் சேக்கிழார், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பற்றியும் இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.