10122 மறுமலர்ச்சியடையும் இந்து சமயம்.

மகேஸ்வரி வேலாயுதம். கொழும்பு 3: இந்து சமய அலுவல்கள் அமைச்சு, இல.64, காலி வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

viii, 72 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

இந்து சமய அலுவல்கள் அமைச்சின் 2004-2005 காலப்பகுதிக்குரிய செயற்பாடுகள் பற்றிய விளம்பரக் கட்டுரைகளை உள்ளடக்கும் ஆவணப்பதிவு இது. கோயில்களும் புனருத்தாரணமும், அறநெறிப் பாடசாலைகளின் அபிவிருத்தி, ஆன்மீக எழுச்சிப் பட்டறை, இந்து பிரச்சாரகர்கள் பயிற்சி, அந்தணர் அல்லாத பூசகர்களுக்கான பயிற்சி நெறி, சமய விழாக்கள், மகாநாடுகள், சுநாமி நிவாரணம், மீள்கட்டமைப்பு, கலாசார மண்டபங்கள், கலைகள், கலைஞர்களுக்கான ஊக்குவிப்பு, ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான உதவிகள் ஆகிய தலைப்புகளின்கீழ் புகைப்பட ஆதாரங்களுடன் இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நூலாசிரியர், சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் இந்து சமய அலவல்கள் அமைச்சின் மதியுரைஞராகப் பணியாற்றியவர். 13.5.2008 அன்று  யாழ்ப்பாணம், நெல்லியடியில் வைத்து இனம்தெரியாத இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏனைய பதிவுகள்

14054 வெசாக் சிரிசர 2001.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச ஊழியர் பௌத்த சங்கம், 53-3, ஹோர்ட்டன் பிளேஸ், 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு: ANCL,Commercial

11356 உய்த்தறி  மலர் 1.

மலர் வெளியீட்டுக் குழு. கிளிநொச்சி: உயர்தர மாணவர் மன்றம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, மே 2012. (கிளிநொச்சி: வேழன் பதிப்பகம்). x, 148 பக்கம், புகைப்படங்கள், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,