10463 நாமறிந்த நாவலர்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: இந்து மாமன்றம், பூங்கா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (வவுனியா: சுதன் அச்சகம்).

(8), 20 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 20.5×14.5 சமீ.

யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றிய ஆறுமுக நாவலர் பற்றிய சிறுவர்களுக்கேற்ற வரலாற்று நூலாக இச்சிறு நூல் அமைகின்றது. நாவலர் பற்றிய அடிப்படைத் தகவல்களை சிறுவர் விரும்பி வாசிக்கும் வகையில் இந்நூலில் பொதிந்து வைத்துள்ளார் இந்நூலின் ஆசிரியர். ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர்.

ஏனைய பதிவுகள்

11368 வர்த்தகமும் கணக்கியலும்: 9ஆம் தரம்: இரண்டாம் பகுதி.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×12.5 சமீ. இந்நூல் 9ஆம்