10536 கனவுகளுக்கு மரணம் உண்டு: கவிதைகள்.

ஏ.நஸ்புள்ளாஹ். கிண்ணியா 3: புன்னகைப் பதிப்பகம், சமீனா சம்சுதீன்,  றியாத் நகர், பைசல் நகர், 1வது பதிப்பு, 2011. (திருக்கோணமலை: அஸ்ட்ரா பிரின்டர்ஸ், 43 திருஞானசம்பந்தர் வீதி).

113 பக்கம், விலை ரூபா 450., அளவு: 19.5×15 சமீ., ISBN: 978-955-0518-00-05.

மேகங்களையும் நட்சத்திரங்களையும் இன்னும் மழை, வெயில், பவைகளின் பறத்தல், மேலும் வடிவமைக்கப்பட்ட வாழ்வியலின் அழகியலை முன்பின் கண்டிராதவொரு வெளிக்கு நம்மை அழைத்துச்சென்று மனித உணர்வுகளின் பக்கங்களை, பயணத்தை தொட்டுக்காட்டும் முயற்சியில், அன்புக் கவிஞன் வெற்றிகண்டுள்ளான். 1990இல் கவிதைத் துறைக்குள் நுழைந்த நஸ்புள்ளாஹ், 2008இல் திருக்கோணமலை நூலக அபிவிருத்திச் சங்கம் சிறந்த எழுத்தாளருக்கான விருதினையும், கிண்ணியா பிரதேச சாகித்திய விழாவில் இலக்கிய ஒளி பட்டத்தினை விருதும் வழங்கப்பட்டன. கிண்ணியா நகரசபையினரால் கௌரவிக்கப்பட்ட சமூகம் என்னும் சிறப்ப விருதும் வழங்கப்பட்டள்ளது. இவரத மதல் கவிதைத் தொகப்பு 2003இல் துளியு}ண்டு பன்னகைத்து என்ற தலைப்பிலும், இரண்டாவத தொகுப்பு 2009இல் நதிகளைவத் தேடும் சூரிய சவுக்காரம் என்னும் பெயரிலும் வெளிவந்துள்ளன. இத்தொகுப்பு இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும்.

ஏனைய பதிவுகள்

17227 தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்.

 ஐங்கரன் விக்கினேஸ்வரா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மே 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500.,