10566 சொற்கள் இசைந்தொரு கோலம்: கவிதைகள்-பாடல்கள்.

ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). இலங்கை: உயர் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 80 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 140., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-659-429-4.

உயர்கல்வி மாணவர்களின் திறன் ஊக்குவிப்புக் கருதி உயர்கல்வி அமைச்சு நடாத்திய தமிழ்மொழி மூல ‘ஆற்றல்’ நிகழ்ச்சித்திட்டப் போட்டிகளில் பரிசுபெற்றவையும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டவையுமான  36 கவிதைகள், 3 பாடல்களின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57550).

ஏனைய பதிவுகள்