10614 புலம்பெயர்ந்தவர்களின் புலம்பல்.

வாசு-முத்தழகன் (இயற்பெயர்: வாசுதேவலிங்கம் முத்தழகன்). யாழ்ப்பாணம்: ஈழத்தமிழர் சைவப் பண்பாட்டுக்கழகம், 120/4 திருவள்ளுவர் சாலை, கந்தர்மடம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கற்பகவிநாயகர் அச்சகம், 295/7, காங்கேசன்துறை வீதி).

(8), 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பண்ணாகத்தை பிறப்பிடமாகக்கொண்ட வாசு-முத்தழகன் புலம்பெயர்ந்து ஜேர்மனியின் Aalon நகரில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த எம் தமிழ் உறவுகள்  வெளிநாட்டில் படும் பாடுகளையும், அனுபவிக்கும் இன்னல்களையும், தன் சுய அனுபவங்களையும் சேர்த்து அழகுணர்வுடன் கவிதைகளாக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31062).

ஏனைய பதிவுகள்