10673 அப்பா.

உவர்மலை வி.எஸ்.குமார். திருக்கோணமலை: கற்பகம் இலக்கியச் சோலை, 15, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (திருக்கோணமலை: V’man’s Graphics).

xiv, 106 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-50115-3-2.

வீரகேசரி வார வெளியீடு, மித்திரன், லண்டன் புதினம், பாரிஸ் ஈழமுரசு உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வெளியாகிய 14 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் தாயகத்தில் வாழ்ந்தவேளை மனதில் நிலைத்த சம்பவங்கள் கதைகளின் மையப்பொருளாகியுள்ளன. காதலைப் பேசும் கதைகளும், ஆணாதிக்கம், சந்தேகம், சம்பிரதாயங்கள், மூடக்கொள்கைகள், சாதியம்  என்பன கதைக் கருக்களாகின்றன. கடலோரக் கனவுகள், அப்பா, நிஜங்கள் ஆகிய கதைகள் யதார்த்த வாழ்வைச் சித்திரிக்கின்றன. செவ்வாய் தோஷம் என்னும்  நம்பிக்கை ஒரு பெண்ணின் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி சமூகத்திற்கும் பெற்றோருக்கும் அந்த மூடநம்பிக்கையை வலுவுடன் உடைத்தெறியப்பட வேண்டும் என்று ஒரு கதையில் ஆசிரியர் விளக்குகின்றார். நூலாசிரியர் தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து  வாழ்கின்றார்.

ஏனைய பதிவுகள்

15889 வாழ்க்கையே ஓர் வரலாறு: அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் நினைவுகள்.

மலர்க்குழு. கொழும்பு: அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, ஜ{ன் 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 6-65, (8), பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

16970 பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம் பாகம் 3: மீசாலை.

செல்லையா யோகரத்தினம் (தொகுப்பாசிரியர்). கனடா: ஆதவன் வெளியீட்டகம், 771, பிரிம்லி வீதி, ஸ்காபரோ, ஒன்ராரியோ M1J  1C7, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை) xiv, 393 பக்கம், புகைப்படங்கள், விலை: