கலையார்வன் கு.இராயப்பு. யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2012. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு).
xvi, 196 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0197-02-6.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலலைகள் கொஞ்சும் குருநகரின் கடற்றொழிலாளர்களின் பல்வேறு வாழ்க்கைப் பரிமாணங்களை இந்நாவல் மிக உன்னிப்புடன் பதிவுசெய்கின்றது. போர் விரித்த வலைக்குள் சிக்குண்டு வாழ்ந்த அந்த நெய்தல் நிலத்து மக்களின் வாழ்க்கை ஒரு வரலாற்றுப் பதிவாக இந்நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆசிரியரின் 15ஆவது நூல் இதுவாகும். அவரது முதலாவது நாவலாகவும் இது அமைந்துள்ளது.