10741 ஒவ்வாமுனைக் காந்தங்கள் (நாவல்).

ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, நவம்பர் 1990. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).

133 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×14 சமீ., ISBN: 955-95096-1-6.

தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு புனையப்பெற்ற நாவல் இது. இரு இனங்களினதும் கலாச்சாரங்கள், பண்பாடுகள் ஆகியவை கதையில் ஆழமாக இழையோடுகின்றன. இவ்விரு இனங்களினதும் ஒற்றுமையைக் குலைக்க எவ்வாறுதான் ஆதிக்க சக்திகள் முயற்சிசெய்தாலும் இதயங்களினால் ஒன்றிணைந்த அவர்களை நிரந்தரமாகப் பிரிக்க முடியாது என்பதை முன்னிறுத்தி இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் நிதி உதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

13690 தனித்தலையும் பறவையின் துயர்கவியும் பாடல்கள்.

றகுமான்-ஏ-ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). கல்முனை: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 124A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை, மருதமுனை, 1வது பதிப்பு, ஜுன் 2007. (அக்கரைப்பற்று: நியு செலெக்ஷன்). (12), 56 பக்கம்,