சுவிஸ் மூர்த்தி மாஸ்டர். சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, இரகிசா கட்டிடம், 68 அண்ணா சாலை, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, இரகிசா கட்டிடம், 68 அண்ணா சாலை).
176 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89708-48-1.
கங்கை மகன், மறவன்புலவு க.சச்சிதானந்தன், எம்.வை.எம்.சித்தீக், பூ.சிறிதர்சிங், வி.தேவராஜ், ஆ.விவேகானந்தா, ரி.என்.ரூபி, கோவை நந்தன் ஆகியோரின் வாழ்த்துக் கட்டுரைகளுடன், சுவிஸ் மூர்த்தி மாஸ்டர் எழுதிய பெண்ணடிமை-மேற்கில் நம் பெண்கள், ஐரோப்பியத் தமிழ்த் திருமணம், தொடரும் தாமதம், என் மனைவி என் தந்தையின் மனைவியாக அழைக்கப்பட்டாள். பயம், சீட்டும் சீரழிவும், தூரத்து விடிவெள்ளி: ஒரு தந்தையின் பார்வை, மரம், பிஞ்சுகள் மீதான பாலியல் வன்முறைகளும் வடுக்களும், கயவனால் காயப்படுத்தப்பட்ட எட்டு வயதுச் சிறுவன், இவர்களையும் இனம்காணுவோம், மொழிபெயர்ப்பாளரின் வேதனை, வேதனை அவளுக்கும் தான், முதுமையின் நட்பு, உயரப் பறந்த எங்கள் வீடு, பிணக் குவியலிலிருந்து உயிர் பிழைத்தவன் நான், மருத்துவத்தின் மறுபக்கம், புகழைத்தேடி, அந்நியனே வெளியேறு, அகதி, சிறுவர் பாடசாலையில் தமிழ்ப் பிஞ்சுகளின் வேதனை, உதவி ஆகிய 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புகலிட வாழ்வின் அனுபவங்களை பெரும்பாலான கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.