என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், ஐக்கிய இராச்சியக் கிளை, 48, Hallwicks Road, Luton, LU2 9BH இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, பங்குனி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-0-9930143-2-1.
இந்நூலிலுள்ள கட்டுரைகள் 2003 முதல் சுமார் பத்தாண்டுகளாக காலத்துக்குக் காலம் மலேசிய இதழ்களுக்கும், ஈழத்தில் தினக்குரல், ஞானம் போன்ற ஊடகங்களுக்கும், புகலிட ஊடகங்களுக்கும் ஆசிரியரால் எழுதப்பெற்றவை. நேர்காணல்கள் மலேசிய ஊடகங்களுக்காக வழங்கப்பட்டவை. மலேசியத் தமிழ் இலக்கியம்: ஒரு வரலாற்றுப் பார்வை, மலேசியத் தமிழ்நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு, மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கியங்களுக்கூடாக வெளிப்படும் மலேசிய வரலாற்றுக் கூறுகள், மலேசியத் தமிழ் நூல்கள்: ஆவணப்படுத்தும் முயற்சிகள், சிங்கப்பூரில் தமிழ் நூலுக்குத் தேசிய விருது, வல்லினம்: உலகத்தமிழரை நாடிவரும் ஒரு மலேசியத் தமிழ்ச் சிற்றிலக்கிய ஏடு, மலேசியத் தமிழர்களின் நீள்துயில் கலைகின்றதா?, மலேசிய இலக்கிய நிகழ்வுக் கண்ணோட்டம், நூலகவியலாளர் என்.செல்வராஜாவின் மலேசிய விஜயம், மலேசிய இலக்கியம் உண்மையில் ஒடுக்கப்பட்டுள்ளது: நூலகவியலாளர் செல்வராஜாவுடனான ம.நவீனின் நேர்காணல், வரலாறுகளைப் பதிவுசெய்யவேண்டும்: நூல் தொகுப்பாளர் செல்வராஜா கூறுகின்றார் ஆகிய 11 தலைப்புகளில் இவ்வாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ஆசிரியர் இதுவரை எழுதியுள்ள 39 நூல்கள் பற்றிய குறிப்புரையுடன் கூடிய நூல்விபரப்பட்டியல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நூல் ஆசிரியரின் 40ஆவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.