10994 நெஞ்சில் நிலைத்தவர்கள்.

கு.சின்னப்பபாரதி. சென்னை600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (சென்னை 49: ஜெமினி ஓப்செட் பிரின்டர்ஸ், வில்லிவாக்கம்).

218 பக்கம், விலை: இந்திய ரூபா 175., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-83051-19-9.

தமிழகப் படைப்பாளி கு.சின்னப்பபாரதி எழுதிய இந்நூல் தமிழத்திலும் ஈழத்திலும் வாழும் கலை, இலக்கியவாதிகள் பற்றிய அவரது மனப்பதிவுகளாகும். இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், ஆர்.கே.கண்ணன், கே.வைத்தியநாதன் உள்ளிட்ட 41 படைப்பாளர்கள் மத்தியில், இலங்கை எழுத்தாளர்களான உபாலி லீலாரத்ன, லண்டன் உதயணன், அந்தனி ஜீவா, டென்மார்க் ஜீவகுமாரன், பாரிஸ் வி.ரி.இளங்கோவன்ஆகியோர் பற்றியும் தனது மனப்பதிவுகளை தனித்தனிக் கட்டுரைகளாக ஆசிரியர் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்