மாயூரம் வேதநாயகம்பிள்ளை. யாழ்ப்பாணம்: சி.சபாரத்தினம், ஐயனார் கோவிலடி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, தை 1924. (யாழ்ப்பாணம்: தையல்நாயகி அச்சியந்திரசாலை).
108 பக்கம், விலை: சதம் 85., அளவு: 20×14 சமீ.
இந்நூல் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் மாணாக்கரும், மாயூரம் தாலுகா டிஸ்ட்ரிக் முன்சீவ் ஆக இருந்தவரும், பெண்மதிமாலை, நீதிநூல், சர்வசமயசமரசக் கீர்த்தனை, பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம் ஆகிய நூல்களின் ஆசிரியருமான மாயூரம் வேதநாயகம்பிள்ளை அவர்களால் 1889களில் இயற்றப்பட்டது. இந்நூல் பின்னர் 1924இல் சீனியர் பரீட்சைக்கு, கேம்பிரிட்ஜ் சர்வகலா சங்கத்தாரால் தமிழ்ப் பாடநூல்களிலொன்றாக விதிக்கப்பட்டது. அதனால் மூலநூலின் தவறுகள் களையப்பெற்று மீண்டும் புத்துருவாக்கம்பெற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்துசாதன பத்திராசிரியருமான ம.வே.திருஞானசம்பந்தபிள்ளை செய்த திருத்தத்தோடும் அரும்பத விளக்கத்தோடும் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு கல்வியின் அவசியத்தை விளக்கும் நூல் என்ற வகையில் பெண்கல்வி தொடர்பான முன்னோடி நூல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1629).