சே.வேல்முருகு. ஐக்கிய இராச்சியம்: சே.வேல்முருகு, மில்ட்டன் கீன்ஸ், இங்கிலாந்து, 1வது பதிப்பு, சித்திரை 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(13), 47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.
இலங்கையில் மருத்துவப் பயிற்சியாளராகப் (R.M.P) பணியாற்றிய பேரறிஞர் சே.வேல்முருகு அவர்கள் மெய்ப்பொருள் நிலை (State of Reality) பற்றி இயற்றிய மெய்யியல் தத்துவப் பாடல்கள் இவை. முன்னுரை-சொல்லுரை, மெய்யுணர்வு, நற்சிந்தனை, மனித வாழ்க்கை, துரியாதீதம், இனமுறைமை, ஞான ஊஞ்சல், இல்வாழ்க்கை நல்லறம் ஆகிய எட்டு பிரிவுகளின்கீழ் இவை தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17023).