11110 கத்தோலிக்கமும் கவிஞரும்: ஞானக் களஞ்சியம் 1.

க.த.ஞானப்பிரகாசம். யாழ்;ப்பாணம்: கத்தோலிக்க கலை இலக்கிய வட்டம், 10/2, மத்தியூஸ் வீதி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 681, காங்கேசன்துறை வீதி).

viii, 67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43475-1-9.

நெடுந்தீவைச் சேர்ந்த அரச பொற்கிழிப் புலவர், கவிமாமணி க.த.ஞானப்பிரகாசம் அவர்களின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு இது. அவரது நூற்றாண்டு விழாவையும், பத்தாவதாண்டு நினைவு விழாவையும் ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக வேதாகமச் சிறப்புகள், யேசுபிரானின் புதுமைகள்- உவமைகள்- பொழிவுகள், நமக்கோர் பாலன், மாமரி, புனிதர், பாப்பரசர், ஆயர் ஆகிய நூல்தொகுப்புகளில் இவரது கவிதைகள் பல இடம்பெற்றுள்ளன. 1948-1960 காலகட்டத்தில் இவரது கவிதைகள் பாதுகாவலன் பததிரிகையை அலங்கரித்துவந்தன. இவை அனைத்திலும் இருந்தெடுத்த தேர்ந்த கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61065).

ஏனைய பதிவுகள்

13788 காணா இன்பம் கனிந்ததேனோ?

ஆ.மு.சி.வேலழகன் (இயற்பெயர்: சி.வேல்முருகு). மட்டக்களப்பு: ஆ.மு.சி.வேலழகன், கலைமகள் வீதி, தாமரைக்குளம், தாழங்குடா-2, 1வது பதிப்பு, 2010. (சென்னை 5: ஸ்ரீ இராகவேந்திரா பிரிண்டர்ஸ், 15, தானப்ப தெரு, திருவல்லிக்கேணி). 143 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,