11174 காரை ஒளி: காரைநகர் சிவன்கோவில்(ஈழத்துச் சிதம்பரம்) மகா கும்பாபிஷேக மலர் 1998.

நா.பொன்னையா (ஆசிரியர்). கொழும்பு 13: காரை அபிவிருத்திச் சபை, 98, விவேகானந்தா மேடு, 1வது பதிப்பு. 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(18), 31 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

இம்மலரில் கோபுரங்களின் தோற்றம், காரை அபிவிருத்திச் சபையின் காப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்களின் பட்டியல், காரை அபிவிருத்திச் சபையின் ஏடான காரைஒளி ஆசிரியர் நா.பொன்னையாவின் கருத்து, தலைவர் ச.ச.இராசரத்தினம் அவர்களின் ஆசிச் செய்தி, ஈழத்துச் சிதம்பரம் (புலவர் அ.திருநாவுக்கரசு), இறைவனை நினைவூட்டும் இராஜகோபுரம் (நா.பொன்னையா), சேருதும் அமளி (இ.ஜெயராஜ்), தில்லைத்தலம் போன்ற ஈழத்துச் சிதம்பரம் (எஸ்.ஆர்.எஸ்.தேவதாசன்), மனிதப் பிறவியின் மாண்பும் அதன் குறிக்கோளும் (தி.மார்க்கண்டு), திருக்குறளும் தமிழ் மொழியும் (ஆ.தருமலிங்கம்), ஈழத்துச் சிதம்பர தல புராணம், ஆலய தரிசன விதிகள், நன்றியுரை ஆகிய தலைப்புகளில் விடயதானங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39171).

ஏனைய பதிவுகள்

12128 – கந்த புராணச் சுருக்கம்.

க.குருமூர்த்தி ஐயர். வட்டுக்கோட்டை: க.குருமூர்த்தி ஐயர், கண்ணலிங்கேசுர சுவாமி கோவில், 1வது பதிப்பு, தாது வருடம், கார்த்திகை 1936. (யாழ்ப்பாணம்: செந்தமிழ்ப் பரிபாலன யந்திரசாலை, வண்ணார்பண்ணை). (5+4), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12551 – தமிழ்: ஆண்டு 5.

இ.விசாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1986, 1வது பதிப்பு, 1985. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு). viii, 205 பக்கம்,