சந்தனா நல்லலிங்கம். சென்னை 600008: காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, வைகாசி 1995. (சென்னை 600 014: அலமு அச்சகம், ராயப்பேட்டை).
(8), 296 பக்கம், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ.
சிறந்த முருக பக்தரான சந்தனா நல்லலிங்கம், 1933 நவம்பர் 19இல் கிழக்கிலங்கையில் பிறந்தவர். வடக்கிலங்கையை புகுந்த வீடாக்கிப் பின் மேற்கிலங்கையை தொழில் வாய்ப்புடன் வாழ்விடமாக்கிக்கொண்டவர். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். கொழும்பு, பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். கதிர்காமத் தல வரலாறு, பிரபந்த வகைகள் -ஓர் அறிமுகம், கதிர்காமப் பிரபந்தங்கள் காட்டும் நாட்டுவளமும் சமுதாய வாழ்க்கையும், கதிர்காமப் பிரபந்தங்களிற் காணப்படும் பக்தி வெளிப்பாடு, கதிர்காமப் பிரபந்தங்களிற் காணப்படும் யாப்பும் அணியும் ஆகிய ஐந்து இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16665).