11207 கந்தரநுபூதி மூலமும் உரையும்.

அருணகிரிநாதர் (மூலம்), க.கார்த்திகேசு யோகி (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: வழக்கம்பரை பஜனைச் சபை, வழக்கம்பரை, 1வது பதிப்பு, வைகாசி 1978. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

xi, 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி மனவியல் உண்மைகளைத் தன்னுள் அடக்கிய ஒரு மகத்தான நூல். மந்திரம், தந்திரம், அதன் பிரயோகம் என மூன்றும் கொண்டது. ‘கல்’ போன்ற நெஞ்சுடையாரும் கரைந்துருக, தன்னை வந்து அடைந்தார்க்கு ஆறுமுகன் தயை (அருள்) புரிகின்றான் என்கிறார் அருணகிரியார். செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் தொடுக்கப்பெற்ற கந்தரநுபூதி என்னும் கவிமாலையானது சைவ சமயிகளில் மிக முக்கியமான பக்தி இக்கியங்களுள் ஒன்றாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11101).

ஏனைய பதிவுகள்