செ.சொர்ணலிங்கம். நீர்கொழும்பு: E.A.K.சொக்கநாதன், 132 கடற்கரைத் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122 சென்ட்ரல் வீதி).
20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
நீர்கொழும்பு, அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 1997ம் ஆண்டு ஆடி மாதம் நடைபெற்ற இலட்சார்ச்சனையை முன்னிட்டும், சைவப்பெருமக்கள் பயன்பெறும் பொருட்டும், திருமுறைகளில் உள்ள சில பாடல்களின் சிறப்புகளை உரையுடன் தொகுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளது. உதாரணமாக ஞானசம்பந்தர் தேவாரம் ஒன்றினைத் (கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே..) தந்து சிவாக்கினி வளர்ப்போர் சிறப்பு என்ற தலைப்புடன் கீழ்க்கண்டவாறு பதியப்பட்டுள்ளது. ‘அதாவது நாம் வேதாகமங்களில் கற்ற நெறிபிறழாது காலை, மதியம், மாலை ஆகிய முப்போதும் எரியோம்புதல் மூலம் புறத்தில் சிவாக்கினியையும் அகத்தில் சிவக்கொழுந்தையும் தரிசிக்கும் அந்தணர்கள் அத்தகு கிரியையால் அவர் கலியின் கொடுமையை நீக்குவரெனத் தில்லைவாழ் அந்தணர் சிறப்புப் போற்றப்படுகின்றது.’(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16799).