11233 தோத்திரத் திரட்டு.

விபுலானந்த அடிகளார் (மூலம்), ஈழத்துப் பூராடனார் (உரையாசிரியர்), அன்புமணி இரா.நாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, தை 1992. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம்;, 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

xxiii, 57 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ.

முத்தமிழ் வித்தகர் அருட்திரு விபுலானந்த அடிகளார் தன் இளமைக்காலத்தில் காரேறு மூதூர் சாமிதாச மயில்வாகனன் என்ற பெயரில் யாத்தளித்த தோத்திரத்திரட்டு இதுவாகும். இதில் கணேச தோத்திர பஞ்சகம், மாணிக்கப்பிள்ளையார் இரட்டை மணிமாலை, சுப்பிரமணியசுவாமி இரட்டைமணிமாலை, கோதண்ட நியாயபுரிக் குமரவேணவமணிமாலை ஆகியவை திரட்டித்தரப்பட்டுள்ளன. இத்தோத்திரத் திரட்டிற்கான உரையை ஈழத்துப்பூராடனார், க.த.செல்வராசகோபால் எழுதியுள்ளார். சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12708).

ஏனைய பதிவுகள்

Titanic Terror To your Vapor

Posts Provides Preferred Game Buy Titanic: Thrill Of Day Inside phase the new boat continues to drain one to draw all date a single otherwise