11248 மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம்.

சுவாமி மாணிக்கவாசகர். வவுனியா: வை.செ.தேவராசா, 59, வைரவர் கோவில் வீதி, வயிரவ புளியங்குளம், 1வது பதிப்பு, மார்கழி 1995. (சென்னை 600002: காந்தளகம், 834, அண்ணா சாலை).

224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.

திருவாசகத்தை 75 முறைக்கும் மேல் முற்றோதல் செய்ததை முன்னிட்டு இறைபணிச் செம்மல் திரு. வை.செ.தேவராசா அவர்கள் வெளியிடும் திருவாசக நூல் இது. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தௌ;ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, குயிற்பத்து, திருத்தசாங்கம், திருப்பள்ளியெழுச்சி, கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம், செந்திலாப்பத்து. அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப் பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம், கண்டபத்து, பிரார்த்தனைப் பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப் பத்து, அச்சப்பத்து, திருப்பாண்டிப்பதிகம், பிடித்தபத்து, திருவேசறவு, திருப்புலம்பல், குலாப்பத்து, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, எண்ணப்பதிகம், யாத்திரைப் பத்து, திருப்படையெழுச்சி, திருவெண்பா, பண்டாயநான்மறை, திருப்படையாட்சி, ஆனந்தமாலை, அச்சோப்பதிகம் ஆகிய மணிவாசகர் பதிகங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15062).

ஏனைய பதிவுகள்