இ.இரத்தினம். கொழும்பு 4: பராஸ் வெளியீடு, 5 ரம்யா வீதி, இணை வெளியீடு, கொழும்பு 4: செய்யுட்களம், 18, ஆதேசு இடம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1976. (கொழும்பு 10: கவிதா பப்ளிக்கேஷன், 27, 2/2, ஜயந்த வீரசேகர மாவத்தை).
26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
புலவர் சிவங் கருணாலய பாண்டியனாரின் மாணாக்கரான புலவர் இ.இரத்தினம் அவர்கள் தன் குருவுடன் இணைந்து காந்தியம் இதழில் ஆசிரியப் பணியாற்றியவர். தமிழறிஞர் இளையதம்பி இரத்தினம் அவர்கள் இயற்றிய செய்யுள் தொகுதி இதுவாகும். இணுவிலைச் சேர்ந்த இவர் 17.8.1916இல் பிறந்தவர். 21.3.1981இல் இறைபதமெய்தியவர். முருக பக்தரான இவர் இணுவில் கந்தன் மீது தீராக்காதல் கொண்டவர். தன் இறுதிக்காலத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டு தமிழ்ப்பணியாற்றிவந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில்; பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 120880).