ஆ.மு.ஷரிபுத்தீன் (மூலம்), லுணுகலை ஸ்ரீ (தொகுப்பாசிரியர்). மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு. மே 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 87 பக்கம், விலை: ரூபா 400., 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0112-03-5.
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் 574 வெண்பாக்களின் தொகுப்பினை அன்னாரது 108ஆவது அகவையை முன்னிட்டு அன்னை வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்கள், வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் திருநபி வாய்மொழிகளை (ஹதீஸ்) கிடைத்தபோதெல்லாம் அதனை செய்யுளாக எழுதியும், எழுத இயலாதபட்சத்தில் பிறரைக்கொண்டோ பதிவு செய்து வைத்திருக்கிறார் அமரர் ஷரிபுத்தீன். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சிகளின்போது கூறப்படும் ஹதீஸ்களை வைத்து அன்றன்றே படுக்கைக்குப் போகும்வேளைகளில் எளிமையான செய்யுள் வடிவில் அவற்றை எழுதிவைத்துவிடுவார். அத்தகைய 1500 கருவூலங்களில் இருந்து தேர்ந்து 574 செய்யுள்களை இந்நூலாக்கத்திற்கு லுணுகலை ஸ்ரீ பயன்படுத்தியுள்ளார்.