11269 நாயகமே பூமிக்கு வாருங்கள்: நெடுங்கவிதை.

கவிஞர் அபூபக்கர் (இயற்பெயர்: A.M.அபூபக்கர்). சாய்ந்தமருது-5: இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம், போஸ்தான், 62, ஒஸ்மன் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 48 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ., ISBN: 955-96577-1-2.

அண்ணல் நபி நாயகத்தின் அருட்குணங்களையும் பெருமைகளையும் அரும்பெருஞ் செய்கைகளையும் இஸ்லாமியப் புனிதர்களின் உத்தம செயல்களையும் அவர்கள் புரிந்த அரும்பெரும் தியாகங்களையும் அவர்தம் சீரிய வாழ்வையும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ஆங்காங்கே வெளிப்படுத்திச் செல்லும் கவிஞர், தமது மனக் குமுறல்களையும் வாட்டிவதைக்கும் உள்ளப் புகைச்சல்களையும் நித்தமும் உறுத்திக்கொண்டிருக்கும் வேதனைகளையும் கணந்தோறும் இதயத்தைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ஏக்கப் பெருமூச்சுகளையும் நபிகள் நாயகத்திடம் வெளிப்படுத்தி முறையிடும் பாங்கு மெய்சிலிர்க்க வைப்பதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24242).

ஏனைய பதிவுகள்

Play Online Roulette Game No Obtain

Posts Better Sites for Alive Specialist Roulette 🎡 Roleta Americana As you you will anticipate, we have loads of totally free roulette games on how