11276  இரண்டாவது சுனாமி.

பிரேமகுமார டி சில்வா. கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 10: குமரன் புத்தக இல்லம், B3-G3 ரம்யா பிளேஸ்).

24 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1772-75-8.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிகள் 2004 டிசம்பர் 26ம் திகதியன்று சுனாமிப் பேரலை கொந்தளிப்பின் முழுச்சீற்றத்தையும் எதிர்கொண்டன. தலைநகரம் கொழும்பு உட்பட அனைத்துமே தாக்குதலுக்குட்பட்டன. முழுமையாக பல கிராமங்கள் தரைமட்டமாயின. சிற்றூர்களும், காலி, மாத்தறை, ஹாம்பன்தோட்டை போன்ற தென்புற நகரங்களும், கிழக்கில் மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை போன்ற இடங்களும் கடுமையாகத் தாக்குண்டன. தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட கிராமங்களிடையே சமாதான சகவாழ்வின் இழப்பு பற்றிய ஆய்வாக கலாநிதி பிரேமகுமார டிசில்வா எழுதியுள்ள இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14894 கற்பகதேவி: பெருங்கதையிலோர் சிறுகதை.

ந.மயூரரூபன். பருத்தித்துறை: எழினி வெளியீட்டகம், 1வது பதிப்பு, சித்திரை 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. அமரர் திருமதி கற்பகதேவி நவரத்தினம் (28.4.1945-22.3.2017)