செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி வழி, 9வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு).
126 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.
திருக்குறளில் ஒறுத்தல், நனவும் கனவும், உயிரச்சம், ஒழுக்க வரம்புகளும் அரசும், வள்ளுவர் வாழ்ந்த காலம், குடிப்பெருக்கமும் கல்வியும், கள்ளும் காமமும், திருக்குறள் கண்ட உலகம், குறள் கூறும் உறுதிக் கருத்துக்கள், சங்க இலக்கியமும் திருக்குறளும், திருக்குறளும் தொல்காப்பியமும், திருக்குறளில் சமணம், கள்ளும் மயக்கமும், பெண்ணின் ஏற்றமும் வீழ்ச்சியும், காமமும் காதலும், வள்ளவர் காட்டும் வர்க்க சமுதாயம், நோயும் தடுப்பும், இயற்கையும் ஊழ்வினையும், வள்ளுவரும் எதிர்மறைவாதவியலும், வள்ளுவர் கூறும் ஒப்புமைகள் ஆகிய 20 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60609, 56204).