க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசலை, 1வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம், காங்கேசன்துறை வீதி).
vii, 164 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 20×16 சமீ.
சூழல் பாடம் சமூகக் கலை, சமுதாய பாடம் ஆகிய பெயர்களுடைய பாடத்தைக் கற்பதன்மூலம் மாணவர்கள் தமது சுற்றாடலை, நன்கு அறிந்துகொள்கின்றனர். இந்நூல் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனின் அறிவு விருத்திக்கு ஏற்ப திசையறி கருவி, எங்கள் கிராமம், சுற்றாடலின் தரை, சுற்றாடலின் சுவாத்தியம், பருவ காலங்கள், நீர், தேடுவாரற்ற தரையில் உள்ள தாவரங்கள், கடற்கரை மணலில் வளரும் தாவரங்கள், பனை, பண்படுத்தப்படும் தரையிலுள்ள தாவரங்கள், பசளை இடுதல், தானியங்கள், நெல், காய்கறி, விலைப் பயிர்கள், சுற்றாடலில் உள்ள மிருகங்கள், சுற்றாடலில் உள்ள சிறு பிராணிகள், சுற்றாடலில் உள்ள சாதாரண பறவைகள், சுற்றாடலில் உள்ள பூச்சிகள், சுகாதாரம், யாழ்ப்பாணப் பெரியார்கள், உலகப் பெரியார்கள், விஞ்ஞானிகள், யாத்திரீகர்கள், யாழ்ப்பாணக் குடாநாடு, இலங்கைப் பிரிவுகளும் பட்டினங்களும், யாழ்ப்பாணச் சரித்திரம், இந்தியா, போக்குவரத்துச் சாதனங்கள், ஏற்றுமதியும் இறக்குமதியும், சமூகம், சனசமூக நிலையம், கிராமச்சங்கம், சந்தை, கூட்டுறவு, தபாற்கந்தோர், கைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள், தொழிற்சாலைகள், பூமி, வான மண்டலம், அண்டம், நட்சத்திரங்கள் ஆகிய விடயங்களை 33 அத்தியாயங்களில் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13356).