11317 போராட்டம் தொடர்கின்றது: ஸ்ரீலங்கா தோட்டத் தொழிற்சங்கங்களும் பெண்களும்.

மேனகா விஜயலட்சுமி கந்தசாமி (ஆங்கில மூலம்), க.விசயகுமார் (தமிழாக்கம்). கோவை 641 012: தமிழோசை பதிப்பகம், 1050, சத்தி சாலை, காந்திபுரம், 1வது பதிப்பு, ஜுலை 2008. (சென்னை 5: ஜோதி என்டர்பிரைசஸ்).

88 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.

இந்நூல் இலங்கையின் தோட்டத் தொழிற்சங்கங்களில் பெண்களின் தலைமைத்துவம் உருவாகாதது ஏன் என்ற மிக விரிவாக ஆராய்கின்றது. பிரச்சினைகளை மாத்திரம் கூறுவதுடன் நின்றுவிடாது மேனகா, பெண்களின் தலைமைத்துவம் என்ற அந்த இலட்சியத்தினை அடைவது எவ்வாறு என்றும் தனது ஆய்வில் கூறுகின்றார். அறிமுகம், ஸ்ரீலங்காவில் தொழிற்சங்க இயக்கத்தின் உருவாக்கம், காலனியமயமாதலும் தோட்டத் தொழில்துறை உருவாக்கமும், தோட்டத் தொழிலில் பெண் தொழிலார்கள், தோட்டத் தொழிற்சங்கங்கள்: உருவாக்கம், கட்டமைப்பு மற்றும் செயற்பாடு, தொழிற்சங்கங்களில் பெண்கள்: செயல் உறுப்பினர்களும் பெயரளவிலான தலைவர்களும், முடிவுகளும் பரிந்துரைகளும் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்