கோ.அமிர்தலிங்கம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
xviii, 134 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-685-019-2.
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் இந்நூலின் ஆசிரியர். 1977இல் தென்னாசியாவில் முதன்முதலாக பொருளாதாரத்தைத் தாராளமயப்படுத்திய நாடாக இலங்கை இருந்தபோதிலும், 1983ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்த இன யுத்தமானது பொருளாதாரத்தின் மீது பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. விரைவான அபிவிருத்தியை நாடு வேண்டிநிற்கும் போருக்குப் பின்னரான காலகட்டத்தில் கூடுதலான படுகடன்களில் தங்கியிருக்காமல் உள்நாட்டிலேயே நிதிவளங்களைத் தேட வேண்டியது அவசியமாகும். கோட்பாடு மற்றும் பல நாடுகளின் வரி தொடர்பான அனுபவங்களை ஒப்புநோக்கி 1980ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வரி தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இலங்கையின் வரி வருமானத்தினை அதிகரிப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது பற்றி இந்நூல் விரிவாக விளக்குகின்றது. ஆறு இயல்கள் கொண்ட இந்நூலில் முதல் மூன்று இயல்களையும் வரி தொடர்பான கோட்பாடுகளுக்காகவும், இறுதி மூன்று இயல்களையும் இலங்கையில் நடைமுறையிலுள்ள வரிக் கட்டமைப்புப் பற்றியும் வரி வருமான அதிகரிப்பிற்கான வழிவகைகள் பற்றியும் விளக்குவதற்காக ஒதுக்கியுள்ளார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 13310).