ஜனனி ஐயாத்துரை, ஹாயத்திரி சண்முகநாதன் (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ். இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா டிஜிட்டல் பிரின்டர்ஸ், இல. 356, கஸ்தூரியார் வீதி).
xvi, 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
யாழ். இந்து மகளிர் கல்லூரியின் தமிழ் மன்றத்தினரால் வெளியிடப்பட்ட ‘தமிழ் ஆரம்’ என்ற கல்லூரி ஆண்டிதழின் முதலாவது பிரசுரம் இது. இவ்விதழில் பழந்தமிழ் இலக்கியங்களும் தமிழர் வாழ்வியல் அம்சங்களும், திருக்குறள் முத்து, மாணவரும் வாசிப்புத் திறனும், சங்ககாலப் பெண்ணியம், சந்தையில் நான் கண்ட காட்சிகள், நாட்டார் பாடல்களின் தனிச்சிறப்பு, இயற்கை தரும் இன்பம், தமிழ்மொழியின் தொன்மையும் சிறப்பும், வாசுவின் தியாகம், சர்வதேச அரங்கில் பெண், பெண்மை, தனிநாயகம் அடிகளாரின் அளப்பரிய தமிழ்ப்பணி, கிளர்ந்தெழ வேண்டியவர்கள் பெண்களே, உயர்தல் ஆவது உண்மையே, நிகழ்காலத் தோல்விகளே எதிர்கால வெற்றிகள், தந்தை தாய் பேண், ஆசான், அன்பின் மகிமை, நான் ஒரு வைத்தியர் ஆனால், இயற்கை, விஞ்ஞானமும் மனித வாழ்வும், வெகுசனத் தொடர்பு சாதனங்களால் நிகழும் நன்மை தீமைகள், நினைவுகளே, இலக்கியங்களில் பெண், மொழிப் பெருமை காப்போம், தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககாலத் தகவல் தொடர்பு முறைமைகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 26 ஆக்கங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன.