சு.கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்).பிரான்ஸ்: வீ.இரவீந்திரன், இணை வெளியீடு, மாதகல்: முகாமைத்துவக் குழு, மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி, 1வது பதிப்பு. 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
82 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி கட்டடத் திறப்பு விழா சிறப்பிதழாக வெளிவந்துள்ள மலர். ஆசிச் செய்திகள், பன்னாட்டு நலன்புரி அமைப்புகளின் வாழ்த்துச் செய்திகள், இதழாசிரியர் உரை ஆகியவற்றுடன், இந்நூலின் துறைசார் சிறப்புப் பதிவுகளாக சித்தி விநாயகர் முன்பள்ளி முகாமைத்துவக் குழுச் செயலாளரின் அறிக்கை, சித்தி விநாயகர் முன்பள்ளியின் வரலாறு, முன்பள்ளி சிறார்களின் புலன் விருத்தி செயற்பாடுகளுக்காக முன்பள்ளி ஆசிரியர்கள் பிரயோகிக்க வேண்டிய உத்திகள், இளம் குயில் பாடும் சோலை (கவிதை), முன்பள்ளி சிறார்களின் தனிநபர் சுகாதார பழக்க வழக்கங்களும் சுய செயற்பாட்டிற்கான உத்திகளும், மேற்கு நாடுகளில்- குறிப்பாக கனடாவில் முன்பள்ளி, முன்பள்ளி சிறார்களின் ஆளுமை விருத்தியில் ஆக்கச் செயற்பாடுகளின் அவசியம், முன்பள்ளி சிறார்களின் ஆளுமை விருத்தியில் அழகியல் கல்வி செயற்பாடுகள்- ஒரு நோக்கு, முன்பள்ளி கல்வியில் சிறுவர் இலக்கியம், Froebel’s System of Kindergarten Education> முன்பள்ளி நடைமுறைகள் (முகாமைத்துவக் குழுக் கட்டமைப்பும் பொறுப்புகளும், பௌதிகக் கட்டமைப்பும் ஆரோக்கியமான சூழலும், முன்பள்ளிகளில் பேணப்படவேண்டிய ஆவணங்களும் நாளாந்த செயற்பாடுகளும், முன்பள்ளி ஆசிரியர்களின் வகிபாகம், குழந்தையொன்றின் முழு விருத்திக்கான ஆரம்ப அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஆலோசனைகள், உத்தேச பாடத்திட்டமும் பாடக் குறிப்பும்), ஆலமரம் (கவிதை), ஆகிய தலைப்புகளிலான ஆக்கங்களும், முன்பள்ளி ஆசிரியை திருமதி வே. சரோஜினிதேவி அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு, நன்றியுரை என்பனவும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58299).