க.சண்முகலிங்கம்; (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, மார்கழி 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xviii, 354 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ.
1993, ஆகஸ்ட், 20, 21, 22ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற தமிழ் நாட்டார் வழக்காற்றியல் மாநாட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு. நாட்டார் வழக்காற்றுக் கோட்பாடுகளும் அணுகுமுறைகளும் (தே.லூர்து), தமிழ்க் கதைப் பாடல்கள் அமைப்பியல் ஆய்வு (வே.தயாளன்), காமன் கூத்து-மலையக மக்களின் சமூக வாழ்க்கையில் அதன் பங்கு (பெ.வடிவேலன்), மட்டக்களப்பின் மகிடிக் கூத்துக்கள் (சி.மௌனகுரு), அடித்தள மக்கள் மீதான பாலியல் வன்முறையும், நாட்டார் வழக்காறுகளும் (ஆ.சிவசுப்பிரமணியம்), மலையக மக்களும் சிறுதெய்வ வழிபாடும் (ந.வேல்முருகு), தமிழில் நாட்டுப்புற இயல் ஆய்வின் வளர்ச்சியும் வரலாறும் (சு.சக்திவேல்), ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்கியற் பரப்பும், அதில் நுண்ணாய்வுக்குட்பட வேண்டிய கூறுகளும் (அ.சண்முகதாஸ்), நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் (அ.பாண்டுரங்கன்), நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்கள் (எம்.ஏ.நுஃமான்), மலையக நாட்டார் பாடல்கள் (சாரல்நாடன்), தமிழில் ‘நாட்டார்’ (Folk) பற்றிய தேடல் (கா.சிவத்தம்பி), பள்ளு இலக்கியத்தில் நாட்டார் இலக்கியக் கூறுகள் (துரை மனோகரன்), இசை நாடக வரலாறு (காரை.செ.சுந்தரம்பிள்ளை), யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு (என்.சண்முகலிங்கன்) ஆகிய பதினைந்து ஆய்வுக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.