கா.வைத்தீஸ்வரன். கொழும்பு: கா.வைத்தீஸ்வரன், ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேர்ட் பிளேஸ், தெகிவளை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
196 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 460., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-97577-7-1.
சுக வாழ்க்கையினை நாம் கடைப்பிடிப்பதன்மூலம் வாழ்வில் மேன்மையுறுவது எவ்வாறு என்பதை இந்நூல் விளக்குகின்றது. இந்நூலினைப் பண்டைய உணவுப் பழக்க வழக்கங்களை அறிமுகப்படுத்துவதுடன் ஆரம்பிக்கும் ஆசிரியர், தற்காலத்தில் எவ்வாறான தவறான சுகாதாரப் பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றுகின்றோம் என்று சுட்டிக்காட்டி, எவ்வாறு போஷாக்கு மிக்க உணவுகளைத் தயாரிப்பது, ஜீ.ஐ.உணவுகள் அதன் பெறுமானம், உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகள், சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும் முறைகள், இல்லற தர்மம்-குடும்ப வாழ்வு, தனிமை தவிர்ப்போம், முதுமை பெருமைக்குரியது, அழுக்கில்லா அறங்கள், யோகமுத்திரையின் மகிமை, தியானம் செய்யக் கற்றுக்கொள்வோம், நற்பண்புகளை மீளாய்வு செய்வோம் என்பன போன்ற தலைப்புகளில் சுகநலச் செய்திகளை படிமுறையில் வழங்கியுள்ளதுடன் மேலும் பல இன்றியமையாத சுகாதாரத் தகவல்களையும்; அள்ளி வழங்கியுள்ளார். இறுதியில் எமது வாழ்வில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய நற்பண்புகளையும் நமக்கு நினைவூட்டிச் செல்கிறார்.