11503 குழந்தைகளுக்கு ஈசாப் நீதிக் கதைகள்.

இளங்கம்பன் (தொகுப்பாசிரியர்), குலபதி ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 1995. (கொழும்பு 13: கௌரி பிரின்டர்ஸ், 207, ஆட்டுப்பட்டித் தெரு).

48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30., அளவு: 20×13.5 சமீ.

ஈசாப் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர். கி. மு. 600 அளவில் வாழ்ந்தவர். இவர் ஒரு அடிமையாவார். இவர் கூறிய நீதிக்கதைகள் ஈசாப்பின் நீதிக்கதைகள் எனப்படுகின்றன. இந்த நீதிக் கதைகள் உலகின் பெருமளவு மொழிகளில் இன்றளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நூலில் ஈசாப்பின் நீதிக் கதைகளுட் சில சித்திரங்களுடன் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21659).

ஏனைய பதிவுகள்

10360 பரராசசேகரம்: சன்னிரோக  நிதானம்(மூலமும் உரையும்).

சே.சிவசண்முகராஜா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சே.சிவசண்முகராஜா, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவ அலகு,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செற் பிறின்ரேர்ஸ், பலாலி வீதி). vii, 121 பக்கம், விலை:

16119 சிவயோக சுவாமிகளின் அவதார 150ஆவது ஆண்டு மலர் (சிவதொண்டன் மலர் 86, இதழ் 5-8).

எஸ்.வினாசித்தம்பி (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, கே.கே.எஸ். வீதி, 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: அரிசோனா அச்சகம், 93, பலாலி வீதி, திருநெல்வேலி). (2), 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: