கிளிநொச்சி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கரைச்சி, 1வது பதிப்பு, 2016. (கிளிநொச்சி: கரிகணன் பதிப்பகம், இல. 126, ஆனந்தபுரம், ஏ9 வீதி).
xx, 277 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளிவரும் பிரதேச மலரின் 2016ஆம் ஆண்டுக்கான இதழ் இதுவாகும். கரைச்சிப் பிரதேசம் பற்றிய ஏராளமான தகவல்களுடனும் அப்பிரதேசத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளின் ஆக்கங்களுடனும் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. மலர்க் குழுவில் கோ.நாகேஸ்வரன், சிவகாமி உமாகாந்தன், ச.பி.அமலராசா, ப.லுரேந்திரன், கு.றஜீபன், வளவை வளவன், T.S.யோசுவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வாழ்த்துக்கள் (பொதுக்)கட்டுரைகள், சமயம், நவீன இலக்கியம், சிறுகதைகள், கவிதைகள், கல்வியியல், கலைகள், நேர்காணல், அரங்கப் படையல், பண்பாடுகள், பொதுவியல், குறும்பட மற்றும் புகைப்படப் பயிற்சி ஆகிய பரிவுகளுக்குள் அடங்கும் 50 படைப்பாக்கங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.