11573 அன்ன யாவினும்: கவிதைகள்.

மன்னார் அமுதன் (இயற்பெயர்: ஜோசப் அமுதன் டானியல்). மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, கார்த்திகை 2015. (மன்னார்: சைபர்சிட்டி அச்சுக் கலையகம்).

76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-53168-1-1.

மன்னார் அமுதன் அல்லது கௌதமன் என்ற புனைபெயரில் அறியப்படும் ஜோசப் அமுதன் டானியல், ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். இவர் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதி வருகின்றார். இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சின்னக்கடையில், 1984ஆம் ஆண்டில் டானியல் ஜோசப் பிறந்தார். இவர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றபின், 1990இல் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று, விருதுநகர் மாவட்டத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். விட்டு விடுதலை காண், அக்குரோணி ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 2011இல், தடாகம் கலை இலக்கிய வட்டம், மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது. பின்னர் கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். மன்னார் அமுதனின் அண்மைக்கால கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61157).

ஏனைய பதிவுகள்

13428 வழக்குச்சொல் அகராதி.

அ.சிவஞானசீலன் (தொகுப்பாசிரியர்). கரவெட்டி: கலாசாரப் பேரவை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா, நெல்லியடி). (4), x, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17537 காயப்படும் பூமி: கவிதைகள்.

அலெக்ஸ் பரந்தாமன் (இயற்பெயர்: இராசு தங்கவேல்). மானாமதுரை 630606: வளரி எழுத்துக் கூடம், 32, கீழத்தேர் வீதி, சிவகங்கை மாவட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 102 பக்கம், விலை: