11625 சின்னச் சின்ன தூறல்கள்.

நடா சிவராஜா (புனைபெயர்: தமிழ்க் கிறுக்கன்). கோயம்புத்தூர்: தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே.வடமதுரை, கோவை 641017, 1வது பதிப்பு, ஜுன் 2012. (கோயம்புத்தூர்: 641012: ஐடியாஸ் டிசைனிங் அன்ட் பிரிண்டிங்).

xxviii, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

யாழ்ப்பாணத்தில் பிறந்து பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் ‘தமிழ்க் கிறுக்கன்’ கவிஞர் நடா சிவராஜா எழுதிய கவிதைத் தொகுதி. இவருடைய பாடுகளம் தாய்நிலமும் புகலிடமுமாக விரிகின்றது. சிறுவயதில் தனது தாய்மண்ணில் தான் கண்ட, அனுபவித்த காட்சிகளையும் சம்பவங்களையும் இவர் கவிதைகளாக்கியிருக்கிறார். புலம்பெயர்ந்து லண்டன் வந்தபின்பு புகலிடத்தில் நடக்கும் விசயங்கள், மனதை உறுத்திய காட்சிகள் எல்லாம் இவரது ஆழ்மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களாகக் கொப்பளிக்கின்றன. பல பாடல்களில் கவிஞர் வாழ்ந்த மண்ணின் மணம் வீசுகின்றன. இவர் ஊரின் பெரியகுளம் பற்றிய கவிதையை ரசிக்க முடிகின்றது. தனது நாட்டின், தனது தாய்மண்ணின் தற்போதைய நிலை கண்டு ஆதங்கப்படுகின்றார். இவரின் பள்ளிக் காலத்து நினைவுகளை ‘பள்ளியில் துள்ளிய காலம்’ என்ற கவிதையில் அழகாகக் காட்சிப்படுத்துகின்றார். அந்த ஆங்கில ஆசிரியையின் இடை, அந்த வேலியோரத்து காஞ்சோண்டி, அடுத்து கமலாவின் மகள், பின்பு கரும்பலகையில் காதலியின் பெயரோடு குறியிட்டு காதல் சமன் செய்தது என்று தாராளமாகக் கவிவரிகளைச் சேர்த்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

17914 மானிப்பாய் டாக்டர் கிறீன் வாழ்வும் பணியும் (ஈழத்துத் தமிழ் வாழ்வின் ஒளிச்சுடர்கள் வரிசை-3).

இ.அம்பிகைபாகன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 35 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு:

17417 இரசித்த சினிமா.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 112 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 600.,