11645 பச்சை இரத்தம் நீந்தும் காடு: கவிதைகள்.

முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை 3: எம்.எம்.மிஹ்ழார், ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (மருதமுனை: அப்னா பிறின்டர்ஸ்).

xx, 105 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-42405-3-7.

முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் தனது ஆரம்பக் கல்வியை பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தில் கற்று உயர்தரத்தை மருதமுனை அல் மனார் மகா வித்தியாலயத்தில் பூர்த்திசெய்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகமாணிப்பட்டம் பெற்றவர். இவரது கவிதைகள், நினைவேக்கம் (பால்யகால நினைவுகள்), உலக அரசியல் (நியாயங்களைத் தேடி, போர்க்காடு), குடும்ப பாசம் (அவள் வளர்ந்துவிட்டாள்), சமூக விமர்சனம் (மெல்லச் சாகும் உயிர்கள், முறைப்பாடு, எமது மண், பரிணாமம், பொன்னாடை, முகப்புத்தகம், யாசகன்) என்ற சில அம்சங்களைத் தொட்டுச் சென்றாலும் அவருடைய கவிதை வெளியில் நிழலாகப் பின்தொடர்வது காதலின் தகிப்புத்தன்மையாகும். இதுவே இவரை அஜந்தா சித்திரங்களில் ஒருத்தியைப் பொருத்திப் பார்க்கவைக்கின்றது. ஒருத்தியின் புருவங்களில் மழையைக் காண்கின்றது. பெண்கள் தேவ கன்னிகளாகத் தெரிகின்றார்கள். நௌபல் எழுதிய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.

ஏனைய பதிவுகள்

16003 ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை.

ஆ.சதாசிவம் (மூலம்), திருஞானேஸ்வரி சதாசிவம் (பதிப்பாசிரியர்). ஐக்கிய அமெரிக்கா: சதாசிவம் பதிப்பகம், பேதெஸ்டா, மேரிலாண்ட்,  2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1963. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை,

10916 நல்லதிபருக்கான விதப்புரை.

பதிப்பாசிரியர் குழு. தெகிவளை: திருமதி இந்திரா இராஜரட்ணம் சேவைநலன் பாராட்டுக் குழு, 129/1, 1/1, சரணங்கர வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

15521 கலண்டரில் உட்காரும் புலி.

அஹமது ஃபைசல். பொத்துவில் 21: பட்டாம்பூச்சிகள் கலை இலக்கிய பரண், சுல்தான் ஹாஜியார ; வீதி, ஹிதாயபுரம், 1வது பதிப்பு, ஜீலை 2019. (சாய்ந்தமருது: எக்செல்லென்ட் பிரின்ட்). 86 பக்கம், விலை: ரூபா 350.00,