11730 சாகுந்தல நாடகம்.

மறைமலை அடிகள். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, மீள் பதிப்பு, 2012, 5வது பதிப்பு, 1957. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

128 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.

நன்னூல் கூறும் நல்லாசிரியர்க்குரிய மலைப்பண்பு அனைத்தையும் கொண்டவர் மறைமலையடிகள். அளக்க முடியாத பரந்த பல்துறை அறிவு, அவற்றால் விளைந்த பெருமிதம், அசைக்க முடியாத தமிழ்ப் பற்று, தமிழ்த் தேர்ச்சி, கண்டோரைக் கவரும் தோற்றம், வறுமையிலும் செம்மை, தோண்டத் தோண்டக் குறையா அறிவு வளம், இவற்றின் மொத்த உருவே மறைமலையடிகள். மறைமலை அடிகள் நாடகவடிவில் இயற்றிய சாகுந்தலை-துஷியந்தன் கதையே இதுவாகும். அத்தினாபுர மன்னன் துஷ்யந்தன் இந்நாடகத்தின் தலைவனாவான். அவனுடன் துறவோர் தலைவன்-கண்ணுவர், சகுந்தலையின் வளர்ப்புத் தந்தையும் மாரிசர் எனப் பெயர்பெற்றவருமான காசியபர், துஷ்யந்தன் உடனுறைவோனான விதூஷகன், துஷ்யந்தனின் அன்னையின் செய்தி கொண்டுவருவோனான கரபகன், துஷ்யந்தனின் புதல்வன் பரதன் எனப்பலர் இந்நாடக பாத்திரங்களாவர்.

ஏனைய பதிவுகள்

Bitcoin No deposit Incentives

Posts Very Harbors Best Have: Distributions At the Bitstarz On-line casino #step three Opportunity to gain a lot more feel Because the invited bonus is