11832 தடகள விளையாட்டு (நாவல்).

தவபாக்கியம் கிருஷ்ணராஜா. உரும்பிராய்: திருமதி தவபாக்கியம் கிருஷ்ணராஜா, கற்புலம் வீதி, உரும்பிராய் தெற்கு, உரும்பிராய், 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

இந்நூலின் தலைப்பும் மேலைநாட்டுத் தடகள வீராங்கனைகளின் புகைப்படங்களைத் தாங்கிய முன்/பின் அட்டைப்பட வடிவங்களும் இந்த நூலை ஒரு விளையாட்டு/உடற்பயிற்சி நூலாக அடையாளப்படுத்தும் மயக்க நிலையை தோற்றுவிக்கக்கூடும். உண்மையில் இது வாழ்க்கையில் தடைகளைக் களைந்து வெற்றி காணவிளையும் ‘சுகுமாரி’ என்ற கதாபாத்திரத்தின் கதைகூறும் ஒரு நாவலாகும். சிறுவயதில் மண் விளையாட்டு, பாடசாலை நாட்கள், அக்காலத்தக் குறும்புகள், 1958இன் இனக்கலவரம், குருணாகல் வாழ்வு, திருமணங்கள், சிறைச்சாலை வாழ்க்கை, அன்னையின் அறுசுவை உணவு, கடமைச் சமையல், மாமியாரின் நாடகங்கள், பிள்ளைப் பாசம், கடமை உணர்வு என்று இந்நாவல் வளர்க்கப்படுகின்றது. சுகுமாரி தன் வாழ்க்கைப் போராட்டத்தின் இறுதியில் தடைகளைத் தாண்டி அடையும் வெற்றி இந்நாவலின் முடிவாகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50328).

ஏனைய பதிவுகள்