செல்லையா குமாரசாமி. யாழ்ப்பாணம்: நாவற்குழி சித்தி விநாயகர் இளைஞர் சமூக அபிவிருத்திச் சபை- பிரித்தானியா, இலங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: நிலா பதிப்பகம், இல. 72. செட்டிய தெரு, கரவெட்டி).
ix, 263 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ.
யாழ்ப்பாணக் கிராமமொன்றில் கூட்டுப் பாலியல் வல்லறவுக்குட்படுத்தப்படுகிறாள் துளசி என்ற சிறுமி. மயக்கநிலையில் மருத்துவமனையில் இருந்த அவள் வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்க்க அவளைக் கொலைசெய்ய முனைகின்றனர் காமுகர்கள். அதில் தோல்விகண்டு, பணத்தால் வாயை அடைக்க முனைகின்றனர். இந்நாவல் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சமூக விரோதச் செயற்பாடுகளையும் கலாச்சாரச் சீரழிவுகளையும் தெளிவாகப் பதிவுசெய்கின்றது. மானிப்பாய், வவுனியா, கொழும்பு, சென்னை என கதையின் களங்களும் பாத்திர எண்ணிக்கையும் விரிவாக இருந்த போதிலும் ஆசிரியர் மிக நுட்பமாக இவற்றை இணைத்து கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். நாவற்குழி (கைதடி)யைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு செல்லையா குமாரசாமி கவிஞராக, நாடக எழுத்தாளராக, நாவலாசிரியராகப் பல்துறை விற்பன்னராக விளங்குபவர். 50களில் அல்லி என்னும் மாதச் சஞ்சிகையை நடாத்தியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249757).