நவாலியூர் நா.செல்லத்துரை (புனைபெயர்: நவாலியூரான்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ்.ராதவல்லி வெளியீடு, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 128 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-44788-0-2.
கலை இலக்கியத்துறையில் 50 ஆண்டுகளுக்குமேல் அறியப்பெற்றவர் நவாலியூர் நா.செல்லத்துரை. குடும்ப வாழ்வில் உறவுகளால் வரும் சுகமும் துக்கமும் எப்படியெல்லாம் வரும், அவற்றினால் ஏற்படும் விளைவுகள், மனிதனின் மன்னிக்கும் மனப்பாங்கு போன்றவை சிறப்பாக நாவலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. வட்டார வழக்குச் சொற்கள் ஆங்காங்கே இடம்பெறும் இந் நாவலில் நேர்த்தியானதும் இரசனைச் சிறப்பு மிக்கதுமான நடை கையாளப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234254).