11853 மூன்று பாத்திரங்கள் (சிங்கள நாவல்).

கே.ஜயதிலக (சிங்கள மூலம்), தம்பிஐயா தேவதாஸ் (தமிழாக்கம்). சென்னை 600098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட், 41-பி, சிட்கொ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், 1வது பதிப்பு, ஜுன் 1979. (சென்னை 600098: நியூ செஞ்சுரி பிரின்டர்ஸ்).

(4), 108 பக்கம், விலை: இந்திய ரூபா 4.00, அளவு: 18×12 சமீ.

27.6.1926 இல் கம்பஹா, கண்ணிமஹர கிராமத்தில் பிறந்த கே.ஜயதிலக மஹகமசேகர மஹா வித்தியாலயம் என்று அழைக்கப்படும் கிராமத்துப் பாடசாலையிலே தனது ஆரம்பக் கல்வியைப்பெற்றார். 1941 இல் நான் பாடசாலை மாணவனாக இருந்த போதே ஒரு கவிதைத் தொகுப்பை உருவாக்கி அதை 1970 ஆம் ஆண்டு வெளியிட்டார். 1959 ஆம் ஆண்டிலேயே இவரது முதல் நாவல் வெளிவந்தது. ‘பராஜிதயோ’ (தோற்றுப் போனவர்கள்) என்ற இந்த நாவல் வெளிவந்தது. இதனை அடுத்து இவர் எழுதி 1970 இல் வெளியிட்ட ‘சரித்த துனக்’ என்னும் நாவலே இங்கு மூன்று பாத்திரங்கள் என்ற தலைப்பில் தமிழாக்கம் கண்டுள்ளது.  வாசகர்களினதும் விமர்சகர்களினதும் பெரும் வரவேற்பை பெற்ற மூலநாவல், தற்போது அதன் இருபதாவது பதிப்பையும் தாண்டிவிட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24482).

ஏனைய பதிவுகள்

what is cryptocurrency mining

Cryptocurrency meaning Cryptocurrency What is cryptocurrency mining Founded in 1976, Bankrate has a long track record of helping people make smart financial choices. We’ve maintained