ஆ.சதாசிவம். வட்டுக்கோட்டை: ஆ.சதாசிவம், அராலி, 1வது பதிப்பு, 1959. (சென்னை 1: காக்ஸ்டன் அச்சகம், 41, சின்னத்தம்பி தெரு).
(8), 132 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 17.5×12.5 சமீ.
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் பண்டிதர் ஆ.சதாசிவம் அவர்கள் உதிரிகளாக எழுதி வெளியிட்ட பத்துத் தமிழியல் கட்டுரைகளின் தொகுப்பு. ஈழமும் தமிழும், வினோபாவின் கனவு, வானவெளிப் பயணம், ஏடுகாத்த கிழவர், எனது மேல்நாட்டனுபவம், பறம்புமலைப் பாவலன், இயற்கையின் விந்தை, வித்துவக் காய்ச்சல், தத்துவஞானி சுவைச்சர், தமிழிலக்கியமும் மக்கள் வாழ்க்கையும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18351).