ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2016. (சுன்னாகம்: கஜாநந்த் பிரின்டர்ஸ், மானிப்பாய் வீதி, இணுவில்).
80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4078-02-4.
கோப்பாய் சிவம் ‘பலதும் பத்தும்’ பற்றி எழுதிய பத்திரிகைக் கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு. 1967இல் தனது 13ஆவது வயதில் கவிதை எழுதிப் பிரசுரமாகக் கண்டவர் இவர். தொடர்ந்த 50 ஆண்டுக் காலத்தில் சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆன்மீகம், மேடைப்பேச்சு கவியரங்கம், பட்டிமன்றம், வானொலிப் படைப்புகள் என பல்துறைகளிலும் தன் பங்களிப்பை வழங்கியவர். உரைச் சித்திரங்களாக வானொலியில் ஒலித்த இவரது படைப்புக்கள் சிலவற்றின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. முத்திரைகள், நகை, புகழ், மரணம், நமது கல்விப் பாரம்பரியத்தின் இன்றைய நிலை, சொல்லு தமிழ் வளர்க்கும் பிள்ளைத் தமிழ், கவிதைப் போர்- பாரதி தரிசனம், தேனிலும் இனிய தேன்மொழி, ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் ஓரு இனிய பகுதி இளங்கீரனின் ‘மரகதம்’, நகைச்சுவைப் பேட்டி ஆகிய தலைப்புகளில் கோப்பாய் சிவத்தின் பத்துப் படைப்பக்கள் இடம்பெற்றுள்ளன. (நூலின் மேலட்டையில் கோப்பாய் சிவம் கட்டுரைகள் என அச்சாகியுள்ளது). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61238).