11870 முத்தமிழ்: இயல் இசை நாடகம்: சங்ககாலம் முதல்.

பொன்.தெய்வேந்திரன். வவுனியா: வவுனியா மாணவர் வட்டம், 1வது பதிப்பு, 2006. (வவுனியா: ஜீ.எச்.அச்சகம்).

xiii, 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

முத்தமிழில் இயல், முத்தமிழ் இன்பம், முத்தமிழில் இசை, முத்தமிழில் நாடகம் தொகுப்பு ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் விரித்து எழுதப்பட்டுள்ளது. வீரமும் காதலும் பிரிக்க முடியாதவாறு பிணைந்திருந்த சங்ககாலம் தொட்டு நவீன காலத்தின் தோற்றம்வரை என்றுமுள்ள தென்தமிழின் மூன்று அங்கங்களான இயல், இசை, நாடகம் என்பவற்றின் சாராம்சங்களை பகுதிகளாகப் பிரித்தும், விரித்தும் பரஸ்பர தொடர்புகளை ஒன்றின் துணை மற்றொன்றுடன் எவ்வாறு இணைகின்றன என்பதை அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து இயைவுபடுத்தியுள்ளார். இயல் பகுதியில் தொல்காப்பியர் முதல் சங்கப் புலவர்களது காவியக் காலக் குறிப்புகள் இராமாயணம் பற்றிய சிறப்புரைகள், பாரதி பற்றிய குறிப்புகள், தேவாரகாலப் பாடல்கள் போன்றன இடம்பெற்றுள்ளன. வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருதினைப் பெற்ற நூலாசிரியர் ஆசிரிய சேவையில் அரும்பணி ஆற்றியவர். இசைக்கலாமாமணி, சைவப்புலவர், கலைமாமணி, இலக்கியச் செல்வர் போன்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்