என்.கே.ரகுநாதன் (பதிப்பாசிரியர்). பத்தரமுல்லை: இலங்கை தேசிய நூல் அபிவிருத்திச் சபை, கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, 1999. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், 130 சீ, பாகொட வீதி, பிட்டகோட்டை).
x, 175 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 21×14 சமீ., ISBN: 955-602-041-1.
ஆசிரிய எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு. 1996ஆம் ஆண்டு சர்வதேச ஆசிரிய தினத்தை முன்னிட்டு, கல்வி, உயர்கல்வி அமைச்சின் கல்வித் தொழில் அபிவிருத்தி நலன்புரிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரிய படைப்பாளிகளுக்கிடையேயான போட்டியின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதைகளுடன் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்த மற்றும் கதைகள் பலவற்றையும் இத்தொகுப்பில் உள்ளடக்கியுள்ளனர். தமிழ் மொழிமூலப் போட்டிக்கு 1130 சிறுகதைகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் முதல் மூன்று இடங்களையும் வென்ற கதைகளும், மேலதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளும் அக்காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கிடையேயான கவிதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் வென்ற கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31171).