12017 – மனோதத்துவமும் கலையும் போதனாமுறையும்.

பாலு (இயற்பெயர்: சக்தி அ. பாலஐயா). கொழும்பு 12: போதனா பிரசுராலயம், 364, பழைய சோனகத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1952. (கொழும்பு 13: நேரு அச்சகம், 94-1, மேட்டுத் தெரு, Hill Street).

(8), 111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.

ஆரம்ப ஆசிரியர்களுக்கான மனோதத்துவமும் கலையும் போதனாமுறையும் பற்றிய இந்நூல், மனம்-கலை-கற்பனை, கலைஞனின் மனப்பண்பு-தேசத்தின் கடமை, ஞாபகப் பலன், கலையை ரசித்தல், மனோதத்துவமும் படிப்பிக்கும் கலையும், மாணவரின் மனப்பண்பு, குழந்தை காலக் கல்வி, கருத்து வெளிப்பாடு, மாணவ நட்பு, ஆசிரியர்களுக்கு, ஓவியம் அளிக்கும் பயன், ஆக்க சக்தி அவசியம், நமது தொடர்பு, நாட்டின் வருங்காலம் ஆகிய 14 இயல்களில் எழுதப்பட்டுள்ளது. சக்தி அ. பால ஐயா கவிஞர், ஓவியர், எழுத்தாளர், ஆசிரியர், சிந்தனையாளர் என்று பல்வேறு துறைகளில் தடம் பதித்து 2.8.2013இல் மறைந்தவர். தலவாக்கலை லிந்துலை தோட்டத்தை பிறப்பிடமாகவும், வத்தளை மாபோலையினை வசிப்பிடமாகவும் கொண்ட மலையகத்தின் மூத்த கவிஞர் தனிவழி கவிராயர் கலாபூஷணம் சக்தி பால ஐயா 26.07.1925 ஆம் ஆண்டு அப்பாவு விஸ்வநாதன்- லக்ஷ்மி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக தலவாக்கலை லிந்துலையில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை தலவாக்கலை அரச இருமொழி பாடசாலையிலும், இடைநிலை கல்வியை தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியிலும், உயர்கல்வியை இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இந்திய வம்சாவளியினர் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இனமாக பிரஜாவுரிமை அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 1961 ஆம் ஆண்டு ‘இலங்கை இந்திய வம்சாவளி பேரவை’ எனும் அமைப்பை உருவாக்கி அதனை வழிநடத்தி வந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19793).

மேலும் பார்க்க: 12293

ஏனைய பதிவுகள்

14898 நினைவலைகளில் வானொலிக் குயில்: ஒலிபரப்பாளர்களின் மனப்பதிவுகள்.

புஷ்பராணி சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: புஷ்பராணி சிவலிங்கம், 35/1, எட்மன்டன் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: R.S.T. என்டர்பிரைசஸ், 14, W.A. சில்வா மாவத்தை). 164 பக்கம்,

14970 நந்திக் கடல் பேசுகிறது: பின் போர்க்காலமும் களப் பதிவுகளும்.

ஜெரா (தொகுப்பாசிரியர்). இலங்கை: ஊறுகாய் மற்றும் வொய்ஸ் எண்ணிம தளம், 2வது பதிப்பு 2020, 1வது பதிப்பு, 1919. (அச்சகவிபரம் தரப்படவில்லை). (10), 277 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ.,

12373 – கலாசுரபி: தூண்டல்-02, துலங்கல்-13.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). ix, 171 பக்கம், 12 புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5

14433 அரசகரும மொழிகள் தேர்ச்சி மட்டம் 2: தமிழ்.

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத்

14289 யாழ்ப்பாணப் பகுதியில் காணாமற் போனோர் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கை.

காணாமற்போனோர் சம்பந்தமான விசாரணைக்குழு. கொழும்பு 8: இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 36, கின்சி றோட், 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 239 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14147 நல்லைக்குமரன் மலர் 2002.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 104 + (22) பக்கம்,