12036 – முக்கிய இரு நிகழ்வுகளின் நினைவு மலர்.

அரசாங்க தகவல் திணைக்களம். கொழும்பு: அரசாங்கத் தகவல் திணைக்களம், 1வது பதிப்பு, ஜனவரி 1995. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

ix, 245 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5ஒ13.5 சமீ.

‘தெமங்கல மகோற்சவய’ என்ற சிங்களத் தலைப்புடனும், Twice Blessed Day என்ற ஆங்கிலத் தலைப்புடனும் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட இந்த நினைவு மலரின் பக்கங்கள் 151 முதல் 179 வரை தமிழில் வண யெசேவ் வாஸ் அடிகளாரின் முத்திப்பேறு பட்டமளிப்பும், திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் இலங்கை வருகையும் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. 1995 ஜனவரி 20-21ஆம் திகதிகளில் இந்நிகழ்வு இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17301).

ஏனைய பதிவுகள்